தாலுகா அலுவலகத்தில் பார்க்காத வேலைக்கு ராஜினாமா கடிதம் கொடுத்த ஒரு வேடிக்கையான நிகழ்ச்சியை பற்றி நாகேஷ் கூறியதாவது:-
-
‘தாலுகா அலுவலகத்தில் ஏதாவது வேலை கிடைக்குமா என்று தேடிச்சென்றேன். அங்கு ஒரு நாற்காலி காலியாக இருந்தது.
அதில் போய் உட்கார்ந்து கொண்டேன். அங்கு வேலை பார்த்துக் கொண்டு இருந்தவர்கள் என்னைக் கண்டுகொள்ளவே இல்லை.
-
எனவே, எனக்கு எதிரே இருந்த டைப்ரைட்டர் மிஷினில் சும்மா
பொழுதுபோக்காக `டைப்’ செய்ய ஆரம்பித்தேன். அப்போது ஒரு
பெண் வந்து ‘இதை டைப் செய்து கொடுங்கள்’ என்றார். நான் உடனே ‘ஐயம் சாரி! நான் கொஞ்சம் பிஸி’ என்றேன். ‘
இது ரொம்ப அவசரம்’ என்று அந்த பெண் கூற, நான் ‘முடியாது’ என்று மறுத்து விட்டேன். அடுத்த சில நிமிடங்களில் ஒரு பெரியவர்
வந்தார். ‘நான் யார் தெரியுமா? தாசில்தார்! என் பெண் இங்கே
வந்து ஏதோ டைப் செய்யும்படி உன்னிடம் கேட்டுக்கொண்டாளாம்.
-
`டைப்’ செய்து தரமுடியாது என்று நீ திமிராக பதில் சொன்னாயாமே’ என்றார், தாசில்தார். உடனே நான் ‘அது அவங்களோட பெர்சனல்
மேட்டர் போலிருக்கு. அதை நான் ஏன் டைப் செய்து தரவேண்டும்?
அதனால்தான் மறுத்தேன்!’ என்றேன்.
‘உனக்கு ரொம்ப திமிர்! உன் மீது நடவடிக்கை எடுக்கப் போகிறேன்’ என்றார், தாசில்தார். உடனே நான், டைப்ரட்டரில் 4 வரியில்
ராஜினாமா கடிதம் அடித்து கொடுத்தேன். அதை பார்த்தவுடன்
தாசில்தார் உள்பட அனைவரும் குழம்பிப் போனார்கள்.
-
ஏனென்றால் இல்லாத வேலைக்கு அல்லவா நான் ராஜினாமா கடிதம் கொடுத்தேன்!’ இவ்வாறு நாகேஷ் கூறினார்.
-
‘தாலுகா அலுவலகத்தில் ஏதாவது வேலை கிடைக்குமா என்று தேடிச்சென்றேன். அங்கு ஒரு நாற்காலி காலியாக இருந்தது.
அதில் போய் உட்கார்ந்து கொண்டேன். அங்கு வேலை பார்த்துக் கொண்டு இருந்தவர்கள் என்னைக் கண்டுகொள்ளவே இல்லை.
-
எனவே, எனக்கு எதிரே இருந்த டைப்ரைட்டர் மிஷினில் சும்மா
பொழுதுபோக்காக `டைப்’ செய்ய ஆரம்பித்தேன். அப்போது ஒரு
பெண் வந்து ‘இதை டைப் செய்து கொடுங்கள்’ என்றார். நான் உடனே ‘ஐயம் சாரி! நான் கொஞ்சம் பிஸி’ என்றேன். ‘
இது ரொம்ப அவசரம்’ என்று அந்த பெண் கூற, நான் ‘முடியாது’ என்று மறுத்து விட்டேன். அடுத்த சில நிமிடங்களில் ஒரு பெரியவர்
வந்தார். ‘நான் யார் தெரியுமா? தாசில்தார்! என் பெண் இங்கே
வந்து ஏதோ டைப் செய்யும்படி உன்னிடம் கேட்டுக்கொண்டாளாம்.
-
`டைப்’ செய்து தரமுடியாது என்று நீ திமிராக பதில் சொன்னாயாமே’ என்றார், தாசில்தார். உடனே நான் ‘அது அவங்களோட பெர்சனல்
மேட்டர் போலிருக்கு. அதை நான் ஏன் டைப் செய்து தரவேண்டும்?
அதனால்தான் மறுத்தேன்!’ என்றேன்.
‘உனக்கு ரொம்ப திமிர்! உன் மீது நடவடிக்கை எடுக்கப் போகிறேன்’ என்றார், தாசில்தார். உடனே நான், டைப்ரட்டரில் 4 வரியில்
ராஜினாமா கடிதம் அடித்து கொடுத்தேன். அதை பார்த்தவுடன்
தாசில்தார் உள்பட அனைவரும் குழம்பிப் போனார்கள்.
-
ஏனென்றால் இல்லாத வேலைக்கு அல்லவா நான் ராஜினாமா கடிதம் கொடுத்தேன்!’ இவ்வாறு நாகேஷ் கூறினார்.
No comments:
Post a Comment