Monday, February 17, 2014

எவ்வளவோ மேல்

"கடன்காரான் " ஆவதை விட "பிழைக்கத் தெரியாதவன் " எவ்வளவோ மேல் .

"டை " கட்டிய பணக்காரனை விட "கை " கட்டாத ஏழை எவ்வளவோ மேல் .

"கெட்டவன் " ஆவதைவிட "கையாலாகாதவன் " எவ்வளவோ மேல் .

"வல்லவன் " ஆவதைவிட " நல்லவன் "எவ்வளவோ மேல் .

குற்றம் புரியும் "அதிபுத்திசாலி"யை விட ஒன்றுமறியாத "முட்டாள்" எவ்வளவோ மேல் .

"காதலி" க்காக உயிரை விடுபவனை விட "கட்டியவளை " காதலிப்பவன் எவ்வளவோ மேல் .

புறத்தில் அழகாய் அகத்தில் அழுக்காய் இருக்கும் "ஹீரோ "வை விட புறத்தில் அழுக்கும் அகத்தில் அழகும் நிறைந்த "காமெடியன் " எவ்வளவோ மேல் .

மாதர்தம்மை இழிவு செய்யும்" மதயானைகளை "விட நெறி தவறாத "எறும்பு " எவ்வளவோ மேல் .

வெற்றிகளி ன் "கர்வங்களை " விட தோல்வியிலும் "நம்பிக்கை " எவ்வளவோ மேல் .

பொய்யான "புரட்சி" களைவிட அமைதியான "அன்பு" எவ்வளவோ மேல் .

No comments:

Post a Comment