Wednesday, May 14, 2014

வாங்க நாய கண்டுபிடிப்போம் !!!!!!!

பெண் : "என் கணவனை காணவில்லை"!

இன்ஸ்பெக்டர்: "அவருடைய உயரம் என்ன"?

பெண்: "தெரியாது"

இன்ஸ்பெக்டர்: "ஒல்லியா? இல்ல குண்டா இருப்பாரா"?

பெண்: "ஒல்லியா இருக்கமாடாருன்னு நினைக்கிறேன்".

இன்ஸ்பெக்டர்: "அவரோட கண்ணு என்ன கலர்"?

பெண்: "சரியா பாக்கல"

இன்ஸ்பெக்டர்: "முடி நிறமாவது தெரியுமா"?

பெண்: "ம்ம்ம்... கருப்புன்னு நினைக்கிறேன்"

இன்ஸ்பெக்டர்: "சரி, கடைசியா அவர் என்ன கலர் டிரஸ் போட்டிருந்தாரு"?

பெண்: "அதை சரியா கவனிக்கல"

இன்ஸ்பெக்டர்: "தொலைஞ்சு போறப்ப அவர் கூட வேற யாராவது இருந்தாங்களா"??????????

பெண்: "ஆமா! என்னோட ரோமியோ, தங்க சங்கிலில கட்டிருக்கும், உயரம் 30 இன்ச், நல்ல கொழு கொழுன்னு இருக்கும், கண்ணு நீல நிறம், சாக்கலேட் கலர்ல முடி, அதோட வலது கால்ல நக விரல் ஒன்னு உடைஞ்சு போச்சு பாவம், அதுக்கு சிக்கன்ன ரொம்ப பிடிக்கும், என்ன விட்டுட்டு அது சாப்பிட்டதே இல்ல, எப்பவுமே என் கூடவே இருக்கும்".

சொல்லிட்டு அழ ஆரமிச்சாங்க.!..

இன்ஸ்பெக்டர்: "அழாதீங்க, வாங்க நாய கண்டுபிடிப்போம் !!!!!!!


No comments:

Post a Comment