Friday, May 23, 2014

நேரில் பார்த்ததில்லை

ரயில்வே வேலை ஒன்றிற்காக இண்டர்வியூக்கு சென்றிருந்தார் ஒருவர். அப்போது அங்கே கேட்கப் பட்ட கேள்விகளும், அதற்கு அவர் தந்த பதில்களும்!

தண்டவாளத்தில் பிளவு ஏற்பட்டிருப்பதைக் காண்கிறீர்கள். எதிரே ஒரு ரயில் வந்து கொண்டிருக்கிறது. அப்போது என்ன செய்வீர்கள்?

உடனடியாக சிவப்புக் கொடிய ஆட்டி ரயிலை நிறுத்த முயற்சி செய்வேன் சார்...

சிவப்புக் கொடி இல்லை, அப்போது என்ன செய்வீர்கள்?

இரவு நேரமானால், டார்ச் அடித்து சிக்னல் காட்டுவேன்.
கையில் டார்ச்சும் இல்லை, அப்போது என்ன செய்வீர்கள்?

என்னுடைய சிவப்புச் சட்டையைக் கழட்டி கொடியாகப் பயன் படுத்துவேன்.

அன்று நீங்கள் சிவப்பு கலர் சட்டை அணியவில்லை என்றால்...?

உடனடியாக என் சித்தப்பாவிற்கு போன் செய்வேன்!

(ஆபிசருக்கு இந்தப் பதிலைக் கேட்கவும் மிகவும் ஆச்சர்யம்....)

ஏன் உங்கள் சித்தப்பா அவ்வளவு பெரிய ஜாம்பவானா? ரயிலைக் கைகளாளேயே தடுத்து நிறுத்தி விடுவாரோ..?

அதெல்லாம் இல்லை சார். அவர் இதுவரை ரயில் விபத்தை நேரில் பார்த்ததில்லை. அதான்!


No comments:

Post a Comment