Tuesday, September 2, 2014

பெருசா ஒன்னும் இல்லீங்க

என்னடா முனியா நான் ஊர்ல இல்லாதப்ப ஏதும் விசேஷம் உண்டா…?

பெருசா ஒன்னும் இல்லீங்க நம்ம நாய் செத்துப்போச்சு.­..

அடக்கடவுளே எப்படிடா திடீர்ன்னுசெத்துச்சு…?

கெட்டுப்போன மாட்டுக்கறியை தின்னுடுச்சுங்க­….

மாட்டுக்கறி எங்கடா கிடைச்சது அதுக்கு…?

நம்ம வீட்ல தாங்க…

நாம தான் மாட்டுக்கறி திங்கிறதில்லையே ­…!!?

நெருப்புல அவிஞ்சி போன மாடு மூணு நாலா கிடந்து

கெட்டுப்போச்சுங்க. அதைத்தான் நாய் தின்னிடுச்சு…­.

நம்ம மாடா…?

ஆமாங்க…


அய்யய்யோ….!! எப்படிடா எரிஞ்சி போச்சு..!?

நம்ம வீடு எறியும் பொது நெருப்பு பறந்து மாட்டுக்கொட்டகை யில் விழுந்துரிச்சு. ­…

வீடு எப்படிடா எரிஞ்சது….?

குத்து விளக்கு விழுந்து தீ பரவிடிச்சுங்க..­..

குத்து விளக்கு ஏத்துற பழக்கமே நம்ம வீட்டுல கிடையாதேடா…!

அதுக்காக… செத்தவங்க தலைக்கு விளக்கு வைய்க்காம இருக்க முடியுமா…?

யார்ரா செத்தது…?

உங்க அம்மா…

எப்படிடா செத்தாங்க…?

தூக்கு போட்டுக்கிட்டு. ­..

ஏன்டா…?

அவமானத்தில்தான் ­…

என்னடா அவமானம்…?

வீட்டுல இருக்குற பொண்ணு ஒருத்தன் கூட

ஓடிப்போனா ஊரு காறித்துப்பாதா.­..?

ஓடிப்போனது யாருடா…?

உங்க பொண்டாட்டிதான்.­.

No comments:

Post a Comment