Sunday, July 20, 2014

கடவுளே அந்த நானூறு ரூபாய்..!!!

சிறுவன் ஒருவனுக்கு பயங்கர பணகஷ்டம். அவனுக்கு ஒரு ஐநூறு தேவைப்பட்டது. கடவுளிடம் வெகு நாளாக வேண்டி பார்த்தான். ஒண்ணும் வேலைக்கு ஆகவில்லை..

கடைசியாக பணம் தர வேண்டி கடவுளுக்கு ஒரு கடிதம் எழுதினான். உறையின் மேல் கடவுள், இந்தியா என்று எழுதி தபாலில் சேர்த்து விட்டான். பட்டுவாடா பண்ண வேண்டிய தபால் அதிகாரிகள் இந்த கடிதத்தை பார்த்து ஆச்சரியப்பட்டார்கள்.

ஒரு ...விளையாட்டாக அதை பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தார்கள். பிரதமருக்கு ஒரே ஆச்சர்யம். "சரி.. இந்த பையனுக்கு உதவுவோம்.

ஆனால் ஒரு சிறு பையனுக்கு ஐநூறு எல்லாம் அதிகம். எனவே நூறு ரூபாய் மட்டும் அனுப்புவோம்"என்று அனுப்பி வைத்தார். பணம் கிடைத்தவுடன் பையனுக்கு குஷி தாளவில்லை. நன்றி தெரிவித்து கடவுளுக்கு ஒரு கடிதம் எழுதினான். "ரொம்ப நன்றி கடவுளே.. நான் கேட்ட மாதிரி பணம் அனுப்பி வச்சுட்டீங்க..

ஆனாலும்.. நீங்க இந்திய பிரதமர் மன்மோகன்சிங் ஆபீஸ் மூலமா பணம் அனுப்புனத நான் கவர பார்த்து தெரிஞ்சுக்கிட்டேன்.. தயவு செஞ்சு இனிமேல் அப்படி அனுப்பாதீங்க.. நீங்க அனுப்புன காசுல நானூறு ரூபாயை இந்த காங்கிரஸ் அரசாங்கம் திருடிவிட்டது..

No comments:

Post a Comment