Saturday, August 16, 2014

செத்துப் போனவங்க 3 பேர் மேல் உலகத்துல சந்திச்சுக்கிட்டாங்க..

அப்ப ஒரு பேச்சு எழுந்தது.. சவப் பெட்டிக்குள் கிடத்தப்பட்டு குழிக்குள் இறக்கப்படும்போது துக்கத்துக்கு வந்தவங்க இறந்தவரைப் பற்றி என்ன பேசி இருந்தாங்கன்னா சந்தோஷப்பட்டிருப்பீங்கன்னு....

முதல் நபர் சொன்னார்... " நல்ல குடும்பத் தலைவன்.. அனைவரிடமும் அன்பாக இருந்த நல்ல ஊழியன்.." இப்படி சொல்லியிருந்தா மகிழ்ச்சியா இருக்கும்.

இரண்டாம் நபர், " சிறந்த போர்வீரர்.. நாட்டுக்காக வீர மரணம் அடைந்தார்,.." இப்ப்டி சொல்லியிருந்தா வாழ்ந்ததுக்கு பொருள் இருந்திருக்கும்..

3 வது ஆள் புலம்பினான்...

" அங்க பாருங்க.. கை காலெல்லாம் அசையுது.. இன்னும் இவர் சாகல.." ன்னு யாராவது ஒரு நாய் பார்த்து சொல்லியிருந்தா நான் இப்போ உங்ககிட்டே பேசிகிட்டு இருந்துருக்க மாட்டேன்...!


No comments:

Post a Comment