Friday, August 8, 2014

என்ன பண்றீங்க?

ஒரு நாளு ஒரு முயல் அதோட
வீட்டுக்கு வெளியே உக்காந்து லேப்டாப்-ல ஏதோ டைப்
பண்ணிக்கிட்டு இருந்துச்சு, அங்க வந்த நரி முயலைப்பார்த்து

“என்ன பண்ணிக்கிட்டு இருக்க?”

“முயல் எப்பிடி நரிய
வேட்டையாடி சாப்பிடும்ன்னு ஆராய்ச்சி கட்டுரை எழுதிக்கிட்டு இருக்கேன்”

“நீ என்ன லூசா எந்த ஊருல முயல் நரிய வேட்டையாடி இருக்கு?”

“நம்பலையா கொஞ்சம் என் வீட்டுக்குள வேணா வந்து பாரேன்”

கொஞ்ச நேரம் கழிச்சி நரியோட எலும்போட வெளியே வந்த முயல்
திரும்ப டைப் பண்ண ஆரம்பிச்சுச்சு, கொஞ்ச நேரத்தில ஒரு ஓநாய்
அந்த பக்கம் வந்தது

“முயலாரே என்ன பண்றீங்க?”

“முயல்
எப்பிடி ஓநாயை வேட்டையாடி சாப்பிடும்ன்னு ஆராய்ச்சி கட்டுரை எழுதிக்கிட்டு இருக்கேன்”

“ஹே ஹே இது எங்கேயாவது நடக்குமா?”

“நம்பலையா கொஞ்சம் என் வீட்டுக்குள வேணா வந்து பாரேன்”

கொஞ்ச நேரம் கழிச்சி ஓநாயோட எலும்போட வெளியே வந்த
முயல் திரும்ப டைப் பண்ண ஆரம்பிச்சுச்சு, கொஞ்ச நேரத்தில
ஒரு கரடி அந்த பக்கம் வந்தது
“முயலாரே என்ன பண்றீங்க?”

“முயல்
எப்பிடி கரடியை வேட்டையாடி சாப்பிடும்ன்னு ஆராய்ச்சி கட்டுரை எழுதிக்கிட்டு இருக்கேன்”
“நம்ப முடியலையே?”

“நம்பலையா கொஞ்சம் என் வீட்டுக்குள வேணா வந்து பாரேன்”

வீட்டின் உள்ளே : முயல் உள்ள இருந்த சிங்கத்துக்கிட்ட
கரடியை அறிமுகப்படுத்திக்கிட்டு இருந்துச்சு
நீதி : நீங்க எவ்வளவு கேவலமா வேலை செய்யுறீங்க
என்பது முக்கியம் இல்லை உங்க 
பாஸ்க்கு உங்களை பிடிச்சு இருக்கா இல்லையாங்குறது தான்
முக்கியம்.

No comments:

Post a Comment